ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ராயகடா பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரயில் கேபிள் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்த பிரச்சனையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த ராயகடா பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரயில்வே துறை சார்பாக ரூ.10 லட்சமும், ஆந்திர அரசு சார்பாக ரூ.10 லட்சமும், ஒன்றிய அரசு சார்பாக ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.